ரூ.50 லட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் பெறுமதியான கஞ்சாவை தொண்டைமனாறு வீதி வளலாய்ப் பகுதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 31 மற்றும் 32 வயதுடைய மன்னார் மற்றும் மானிப்பாய் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. இதன்போது கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹயர்ஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்த 51 கிலோ 500 கிலோ கிராம் கஞ்சாவும் இதன்போது மீட்கப்பட்டது. … Continue reading ரூ.50 லட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது